திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சக்தி ஐ.பி.எஸ்., ..புதிய தொடரில் நாயகியாகும் யூடியூப் பிரபலம்!

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்

News image

ஸ்வாதிகா

Updated On :6 பிப்ரவரி 2024, 6:58 pm IST

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். சக்தி ஐ.பிஎ.ஸ்., என்று பெயரிடப்பட்டுள்ள தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

சக்தி ஐ.பிஎ.ஸ். தொடர் எந்தத் தொலைக்காட்சி உரிமம் பெறுகிறது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் விரையில் வெளியாகவுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் நடிகை ஸ்வாதிகா துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

யூடியூப் பிரபலமான ஸ்வாதிகா, பல்வேறு குறும்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்தவர். விளம்பர மாடலாகவும் வலம் வரும் ஸ்வாதிகா, சரத்குமாருடன் பரம்பொருள் திரைப்படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது சக்தி ஐ.பிஎ.ஸ். என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்வாதிகா. சின்னத்திரையில் நடிக்கவந்த சில மாதங்களிலேயே நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

இதனால், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சக்தி ஐபிஎஸ் தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி மற்றும் நேரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.