உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சக்தி ஐ.பி.எஸ்., ..புதிய தொடரில் நாயகியாகும் யூடியூப் பிரபலம்!

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்

ஸ்வாதிகா

Published On :

தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்வாதிகா புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். சக்தி ஐ.பிஎ.ஸ்., என்று பெயரிடப்பட்டுள்ள தொடரின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

சக்தி ஐ.பிஎ.ஸ். தொடர் எந்தத் தொலைக்காட்சி உரிமம் பெறுகிறது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் விரையில் வெளியாகவுள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்தத் தொடரில் நடிகை ஸ்வாதிகா துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

யூடியூப் பிரபலமான ஸ்வாதிகா, பல்வேறு குறும்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்தவர். விளம்பர மாடலாகவும் வலம் வரும் ஸ்வாதிகா, சரத்குமாருடன் பரம்பொருள் திரைப்படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது சக்தி ஐ.பிஎ.ஸ். என்ற தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்வாதிகா. சின்னத்திரையில் நடிக்கவந்த சில மாதங்களிலேயே நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

இதனால், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சக்தி ஐபிஎஸ் தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி மற்றும் நேரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.