தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சிவா, சத்யா ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்ததாக சினிமா விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஆந்திராவில் முதல்வராக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘வியூகம்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது ‘செவ்வாய்கிழமை’ படம்!
இந்தப் படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார். தமிழில் கோ, அஞ்சாதே ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர். இந்தப் படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் அமீர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
வன்முறை, கவர்ச்சியென ஏ சர்பிகேட் படங்களை இயக்குவதில் சர்ச்சையான ராம் கோபால் வர்மா தற்போது யு சர்பிகேட் படத்தினை இயக்கியுள்ளபோதும் பிரச்னைகள் வெடித்துள்ளது. காரணம் படத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாணை நகைச்சுவையாக சித்தரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
இதையும் படிக்க: திட்டம் இரண்டு திரைப்பட பாணி காதல்! தோழியைக் கொன்ற திருநம்பி!
இதனை முன்னிட்டு இயக்குநர் ராம் கோபால வர்மா அலுவலம் முன்பாக போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தியும் தகாத வார்த்தைகளை பேசியும் இயக்குநரை கீழே வரும்படி மிரட்டினார்கள். பின்னர் காவல்துறையினர் வரவே கலைந்து சென்றதாக இயக்குநர் பதிவிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் ராம் கோபால் வர்மா, “சந்திரபாபு நாயுடு, பவன்கல்யாண் உங்களது நாய்கள் எனது அலுவலகத்தில் வந்து குரைத்துக் கொண்டிருந்தது; காவலர்கள் வரவே ஓடிவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
Hey @ncbn , @naralokesh and @PawanKalyan , here are your DOGS BARKING outside my office and they RAN OFF when the COPS came pic.twitter.com/mOV4uM76IA
â Ram Gopal Varma (@RGVzoomin) December 25, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்

நெட்பிளிக்ஸில் முதல் இடம் பிடித்த கான் சிட்டி திரைப்படம்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



