மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய நடிகை! ஜீ தமிழின் சீதா ராமனில்..

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய ரேஷ்மா பசுபுலேட்டி ஜீ தமிழின் புதிய தொடரில் நடித்து வருகிறார். சீதா ராமன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image

பிரியங்கா நல்கார் / ரேஷ்மா பசுபுலேட்டி

Updated On :6 பிப்ரவரி 2023, 1:17 pm

DIN

'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகிய ரேஷ்மா பசுபுலேட்டி ஜீ தமிழின் புதிய தொடரில் நடித்து வருகிறார். ''சீதா ராமன்'' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 'பாக்கியலட்சுமி' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த தொடரில் முதன்மை பாத்திரமான கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தத் தொடரிலிருந்து விலகினார். 

ஜீ தமிழின் புதிய தொடரில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. தற்போது ஜீ தமிழில் 'சீதா ராமன்' என்ற புதிய தொடரின் புரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. 

அந்தத் தொடரில் நாயகனின் தாயாராகவும், வில்லியாகவும் அவர் வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடரின் மூலம் பலரின் மனங்களை வென்ற பிரியங்கா நல்கார் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருமணமாகி வரும் நாயகியை முதல்நாளே வீட்டை விட்டு வெளியேற்றும் மாமியாராக அவர் புரோமோவில் தோன்றுகிறார். இதனால், இந்த தொடரில் அழுத்தமான நடிப்பை ரேஷ்மாவிடம் எதிர்பார்க்கலாம் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.