பதான் படம் பிடிக்கவில்லை எனக் கூறிய சிறுமிக்கு நடிகர் ஷாருக்கான் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இந்தப் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பதான் திரைப்படம் இதுவரை ரூ.832 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், அபிஷேக் குமார் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை பகிர்ந்து ஷாருக்கானை டேக் செய்திருந்தார். அந்த காணொலியில், பதான் படம் பிடிக்கவில்லை என ஒரு பெண் குழந்தை கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து ஷாருக்கான் வெளியிட்ட பதிவில், நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இளம் ரசிகர்களை ஏமாற்றி விடக் கூடாது. இது நாட்டின் இளைய சமுதாயம் குறித்த விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவேளை இந்த சிறுமி காதல் ரக படங்களை விரும்புவார் என நினைக்கிறேன். அவருக்கு தன்னுடைய தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தினை பரிந்துரைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஷாருக்கானின் இந்த கமெண்ட் டிவிட்டரில் வைரலாகி வருகின்றது.
Oh oh!! Have to work harder now. Back to the drawing board. Canât let the younger audience be disappointed. Desh ke youth ka sawaal hai. PS: Try DDLJ on her pleaseâ¦.maybe she is the romantic typesâ¦.kids u never know! https://t.co/UBpSnLOZrf
â Shah Rukh Khan (@iamsrk) February 5, 2023
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில் சக கைதிகள் 8 போ் கைது - 3 வாா்டன்கள் இடைநீக்கம்

பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?







