நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளது.
'திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டினார்.
அதனையடுத்து, தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலுடன் கைகோர்த்துள்ளார்.
'மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: ’அரண்மனை - 4’: விலகிய விஜய் சேதுபதி?
இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
அப்போது, காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல் செட்டில் வேகமாக மோதும் அதிர்ச்சிகரமான விடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.