நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தந்தை - மகள் பாசம்: ராஜா ராணி -2 நடிகையின் புதிய தொடர் 'பொன்னி'

'ராஜா ராணி -2' தொடரிலிருந்து விலகிய வைஷு சுந்தர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 4:27 pm IST

'ராஜா ராணி -2' தொடரிலிருந்து விலகிய வைஷு சுந்தர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 

'பொன்னி' என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இளம் தலைமுறையினரின் ரசனைக்கும் ஏற்றவாறு நெடுந்தொடரின் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

சமீபத்தில் பாரதி கண்ணம்மா தொடர் நிறைவு பெற்றது. அதற்கு பதிலாக பாரதி கண்ணம்மா இரண்டாவது அத்தியாயம் ஒளிபரப்பாகி வருகிறது. 

ராஜா ராணி தொடரின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து விலகிய வைஷு சுந்தர், தற்போது புதிய தொடரில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

'பொன்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் முன்னோட்ட விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்து இந்த தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Story image

தந்தை பெற்ற கடனுக்காக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் பெண், சந்திக்கும் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து தொடர் இயங்கலாம். 

தந்தை - மகள் பாசத்தை வைத்து உருவாகும் கதை என்பதால், இந்த தொடருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.