நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ள தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். 1978ஆம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி, நான் சிகப்பு மனிதன் போன்ற 70 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நேரடியாக இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் நடிகர் என பல பிரிவுகளில் சினிமாவில் பணியாற்றியவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிராபிக் ராமசாமி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்த அவர், நான் கடவுள் இல்லை என்ற படத்துக்கு திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இவர் அந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
இவ்வாறு பல துறைகளில் கால் பதித்த எஸ்.ஏ. சந்திரசேகர் விரைவில் சின்னத் திரை தொடர்களிலும் நடிக்கவுள்ளார்.
ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தொடரில் முதன்மையான பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் இந்தத் தொடருக்கு கிழக்கு வாசல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்த அஸ்வினி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கடற்படை கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!

அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவு!

அமோனியா வாயு கசிவு விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




