நடிகர் சூர்யாவுடன் பிரபல மலையாள நடிகர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
இதையும் படிக்க: ’புஷ்பா - 2’ புதிய தகவல்!
நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சூர்யா - ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.