பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் நிறைவடைந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.
இதையும் படிக்க | ஜொனிட்டா காந்தியுடன் நடிக்கும் விராட் கோலி!
இந்நிலையில், இந்த வாரம் ‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க் நடைபெற்றது. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணன் இந்த போட்டியில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், அடுத்த இரண்டு வாரம் நாமினேஷனை கடந்து நேரடியாக இறுதி வாரத்திற்கு முதல் போட்டியாளராக அமுதவாணன் சென்றுள்ளார்.
தொடர்ந்து, பிக் பாஸ் விருது வழங்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், ‘ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரியில்லை’ என்ற விருதை அஷீமுக்கு ஏடிகே கொடுத்தார்.
மேடை ஏறி விருதை வாங்கிய அஷீம், இது எனக்கு தேவையில்லை எனக் கூறிவிட்டு விருதை தூக்கி வீசிய சம்பவம் சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல் போட்டியாளராக அமுதவாணன் இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில், ஒருவர் இந்த வாரமும், இருவர் அடுத்த வாரமும் போட்டியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். மீதமுள்ள நான்கு பேர் இறுதி வாரத்திற்கு முன்னேறுவார்கள்.
அடுத்தடுத்த வாரங்களை கடந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் நான்கு போட்டியாளர்களை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதென்ன அம்புபாச்சி மேளா? எங்கு விசேஷம்? முழு தகவல்!

வாட்ஸ்ஆப் வெப்பில் விடியோ கால், குரூப் வாய்ஸ் அம்சங்கள்!

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



