/

‘ஓடிடியில் படம் பார்ப்பது ரெளடித்தனம்’: இயக்குநர் மிஷ்கின்

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பது ரெளடித்தனம் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

News image

இயக்குநர் மிஷ்கின்

Updated On :13 ஜனவரி 2023, 5:27 pm IST

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பது ரெளடித்தனம் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி நாயகனாக நடித்திருக்கக்கூடிய வெள்ளிமலை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

சூப்பர்ப் கிரேஷன்ஸ் நிறுவனத்தின் ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில் இயக்குனர் ஓம் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் வெள்ளிமலை. இந்தப் படத்தில் சூப்பர் குட் சுப்ரமணி நாயகனாக நடித்துள்ளார். ரகுநந்தன் இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. 

Story image

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். இது போன்ற படங்களை தியேட்டரில் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ரவுடித்தனம். சாமி இல்லாத ஒரே இடம் தியேட்டர்தான்” எனத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திண்டுக்கல் ஐ. லியோனி, பேரரசு.ஆர்.கே.செல்வமணி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.