எதிர்நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சாணக்யா நடித்துள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் முதலிடத்தில் நீடித்து வந்த கயல் தொடரை பின்னுக்குத் தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் வகித்து வருகிறது.

எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் கரிகாலன் - ஆதிரை திருமண காட்சிகள் அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றது.
ஆதிரையை காதலிப்பதாக எதிர்நீச்சல் தொடரில் அருண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சாணக்யா. இவர் சிறுவயது முதலே திரைப்படங்களிலும் சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
சின்னத் திரை நடிகை கீதா ஸ்ரீயின் மகன் சாணக்யா. இதனால், மெட்டி ஒலியில் முதல்முதலாக அறிமுகமானார். அதில் கோபியின் மகனாக நடித்திருந்தார்.
பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடிகை அசினுடன் விளம்பர படப்பிடிப்புக் காட்சியில் நடித்திருந்தார்.
அஜித் நடிப்பில் வெளியான பரமசிவம் படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மலையாள திரைப்படமான ஒரு கடல் படத்திலும்,
அவள் பெயர் தமிழரசி படத்தில் நாயகன் ஜெய் உடைய சிறுவயது பாத்திரத்தில் நடித்திந்தார்.
அதனைத் தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரிலும் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூவா்ண கொடிகளுடன் மிளிரும் சதா் பஜாா்! லட்சக்கணக்கில் கொடி தயாரிக்கும் பாரம்பரிய குடும்பங்கள்!

குடிநீருக்காக அலையும் பிலாக்குறிச்சி கிராம மக்கள்! 45 நாள்களாக அவதி!

காவிரி நீா் வரத்து இல்லாததால் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கா் குறைவு

தானியங்கி நடைமுறையால் தவிக்கும் ஓட்டுநா் உரிம விண்ணப்பதாரா்கள்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



