12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடிகர் விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசல்! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!

ராதிகா சரத்குமார் தயாரிப்பில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆனந்த் பாபு, நடிகை ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கிழக்கு வாசலில் நடித்துள்ளனர்

Published On :

நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் அவ்வபோது புதிய தொடர்கள் அறிமுகமாவது வழக்கம். தற்போது இரு தொடர்கள் முடியவுள்ள நிலையில், கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆனந்த் பாபு, நடிகை ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Story image

ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். விசு நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற சம்சாரம் அது மின்சாரம் படத்தின் தழுவலாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். 

ராதிகா தயாரிப்பதால் கிழக்கு வாசல் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. தற்போது கிழக்கு வாசல் தொடருக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்ட விடியோ (புரோமோ) வெளியிட்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.