தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல: வெளியானது வித்தைக்காரன் டீசர்!

நடிகர் சதீஷின் நடிப்பில் உருவாகியுள்ள வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 8:11 am IST

சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படம் மூலம் மிகவும் பிரபலமானவராக மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். தனுஷுடன் நையாண்டி, விஜய்யுடன் கத்தி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என வரிசையாக அவர் நடித்த நகைச்சுவை படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சதீஷ் நடிப்பில் தற்போது வித்தைக்காரன் படம் உருவாகியுள்ளது. கே.விஜய் பாண்டி தயாரித்துள்ள இந்தப் படத்தினை வெங்கி எழுதி இயக்கியுள்ளார். இவர் மாஸ்டர், விக்ரம் படங்களில் அசோஸியேட் இயக்குநராக வேலைப் பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அறிமுக நாயகி சிம்ரன் குப்தா நடித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ளார். ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மெட்ராஸ் பட புகழ் பாவெல் நவகீதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். மேஜிக் செய்பவராக நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இதில் வரும் ‘ஏமாறுவதுதான் தவறு; ஏமாற்றுவது அல்ல’ வசனம் மக்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.