ரசிகர்கள், பொதுமக்களுக்கு நன்றி: ஜெயிலர் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு நெகிழ்ச்சி! 

ஜெயிலர் படத்தின் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 
ரசிகர்கள், பொதுமக்களுக்கு நன்றி: ஜெயிலர் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு நெகிழ்ச்சி! 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. இந்தப் பாடலை எழுதி பிரபலமானவர் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு. ஹுக்கும் எனும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. யூடியூபில் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக, 'பேரை துக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு..' ஆகிய வரிகள் இணையத்தில் சர்ச்சையானது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே என ரஜினி ரசிகர்கள் மீண்டும் கருத்து தெரிவித்தனர்.  

இந்நிலையில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியாக விடியோவை பதிவிட்டுள்ளார். 

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com