தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சிவப்பினால் ஓவியம் வரையுங்கள்: அமலா பாலின் வைரல் புகைப்படங்கள்! 

நடிகை அமலா பால் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

Story image

சமீபத்தில் அவர் நடிப்பில் திரையரங்கம் மற்றும் ஓடிடி முறையே வெளியீடாக வந்த ‘டீச்சர்’, ‘கடாவர்’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பல இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். பிரபல மலையாள நாவலை படமாக எடுத்துள்ள ப்ரித்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலா பால். விரைவில் வெளியாக உள்ளது. 

Story image

இன்ஸ்டாகிராமில் அமலா பால் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருகிறார்கள். கடைசியாக ஏப்.29இல் பதிவிட்டிருந்த அமலாபால் சுமார் 11 வாரங்களுக்குப் பிறகு கடந்த வாரம்முதல் மீண்டும் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிரத் தொடங்கியுள்ளார் அமலா பால். 

Story image

தற்போது நீலகிரியுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் சிவப்பு நிறத்தினாலான உடையை அணிந்து புலிகள் போல போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து சிவப்பினால் ஓவியம் வரையுங்கள் என தலைப்பிட்டுள்ளார். 

Story image

ரசிகர்கள் டார்ஸான் போல் உள்ளதெனவும் தீயாக இருக்கிறதெனவும் கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.