வழக்கமான சீரியல்களைத் தாண்டி, மக்களிடையே மிக அதிக ஆதரவு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி - 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சியில், மைம் கோபி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், கடந்த 4 சீசனில், வாகை சூடிய முதல் ஆண் போட்டியாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோப்பையுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அவர் வென்றுள்ளார். வெற்ற பெற்ற மைம் கோபி, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிக்க.. இந்தியா பொருளாதார வல்லரசாவது சாத்தியமா?
இரண்டாம் பரிசை நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், மூன்றாம் பரிசை நடிகை விசித்திராவும் வென்றனர். இறுதிப் போட்டியை சிறப்பிக்கும் வகையில், நடிகர் பரத், நடிகை வாணி போஜன், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த இறுதிப் போட்டியே, கோமாளியாக இருந்து குக்காக மாறிய ஷிவாங்கிக்குக் கடைசி நிகழ்ச்சி என்பதால், அவரது உரை மிகவும் உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










