தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன்? 

நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.  

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Story image

இந்நிலையில் நடிகை  மடோனா செபாஸ்டியன் லியோவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2015இல் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் தமிழ் ரசிகர்களின் ஆதரவினை பெற்றார். பின்னர் படங்கள் சரியாக அமையாமல் இருந்த நிலையில் தற்போது விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளதாகவும் முதல் பாடலில் மடோனாவின் பங்கு அதிகமிருக்குமெனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

நடிகை மட்டுமல்ல மடோனா செபாஸ்டியன் பாடலும் பாடுவார் என்பதால் லியோவில் பாடியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் இந்த தகவல் தீயாக பரவி வருகிறது. படக்குழு இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.