திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்(விடியோ)

மேலும் ஒரு புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார். ஆனால் இந்த முறை சூரி நடிக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். 

News image
Updated On :10 மார்ச் 2023, 6:29 pm IST

மேலும் ஒரு புதிய படத்தில் சூரி நாயகனாக நடிக்க உள்ளார். ஆனால் இந்த முறை சூரி நடிக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். 

இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க உள்ளார். இதற்கு முன் இவர் ‘கூழாங்கல்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனன்யா பென் நடிக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

இப்படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் மற்றும் விடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். நடிகர் சூரி, சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக அறிமுகமாகும் விடுதலை படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது சூரியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.