4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

சமந்தா பதிவிற்கு கமெண்ட் செய்த அனுஷ்கா சர்மா! 

நடிகை சமந்தா பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு நடிகை அனுஷ்கா சர்மா செய்த கமெண்ட்டிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :13 மார்ச் 2023, 7:05 pm IST

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யசோதா திரைப்படம் சமந்தாவிற்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது. சாகுந்தலம் ஏப்.14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும் ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ தொடரிலும் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில் சம்ந்தா பகிர்ந்த புகைப்படத்தில் அவரது கைகளில் ரத்த காயங்கள் உள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு ‘சண்டைக்காட்சிகளின்போது கிடைத்த வெகுமதி’ என தலைப்பிட்டுள்ளார். இந்த காயம் வருண்தவானுடன் நடிக்கும் ‘சிட்டாடல்’ எனும் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. 

நடிகை அனுஷ்கா சர்மா குழந்தைப் பேற்றுக்குப் பிறகு சக்தா எக்ஸ்பிரஷ் படத்தில் நடித்துள்ளார். விளையாட்டு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பயோபிக் படமாக உருவாகி வந்துள்ளது. 

இந்நிலையில், கடவுளை கும்பிடுவது போல புகைப்படத்தினை பகிர்ந்த சமந்தா, “சில நேரங்களில் அமானுஷ்ய சக்தி தேவைப்படுவதில்லை. நம்பிக்கை மட்டுமே அதை கொண்டுவரும். நம்பிக்கை நம்மை அமைதியாக்கும். நம்பிக்கை நண்பராகவும் ஆசானாகவும் மாறும். நம்பிக்கை உங்களை அசாதரண மனிதாக்கும்” எனப் பதிவிட்டுருந்தார்.

இந்தப் பதிவிற்கு நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, “ஆமாம்” என கமெண்ட் செய்திருந்தார். இந்த கமெண்டிற்கு 4 ஆயிரம் லைக் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.