இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், அவரை இயக்குவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதையும் படிக்க: படம் இயக்குவதில் விருப்பமில்லை: தியாகராஜன் குமாரராஜா
இந்நிலையில், விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.