நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

படமாகும் இளையராஜா வாழ்க்கை: இவர்தான் நாயகன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

இளையராஜா

Updated On :1 நவம்பர் 2023, 10:11 am IST

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் பிறந்த இளையராஜா, 1970களில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இன்றுவரை தனக்கென தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இளையராஜா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். நூற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.

இந்த படத்தின் கதாநாயகனாக இளையாராஜாவின் தீவிர ரசிகரும், மிக நெருங்கியவருமான நடிகர் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், அவரது 50-வது படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கி, 2025-இல் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.