இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக இருக்கிறார். கதாநாயகனாகவும் பெரிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும்,’கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் - 2’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இறுதியாக, வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது.
இதையும் படிக்க: தன்பாலின ஈர்ப்பாளராக மம்மூட்டி!
இந்நிலையில், இவர் நேரடி மலையாளப் படமொன்றில் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.