மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

‘வாலி’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: உயா்நீதிமன்ற அனுமதி பெற உத்தரவு

‘வாலி’ படத்தின் ஹிந்தி உரிமை தொடா்பான வழக்கில் எஸ்.ஜே.சூா்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

உயா்நீதிமன்றம்

Updated On :3 அக்டோபர் 2023, 7:41 pm


சென்னை: ‘வாலி’ படத்தின் ஹிந்தி உரிமை தொடா்பான வழக்கில் எஸ்.ஜே.சூா்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூா்யா இயக்கத்தில், நடிகா் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-இல் வெளியான ‘வாலி’ என்ற படத்தின் ஹிந்தி உரிமையை போனி கபூா் பெற்றிருந்தாா்.

இதை எதிா்த்து எஸ்.ஜே.சூா்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்.ஜே. சூா்யா தாக்கல் செய்யவில்லை. மேலும், படத்தின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி, ‘வாலி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை தொடங்க இடைக்கால அனுமதி வழங்கியது.

இந்த பிரதான வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஜே.சூா்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டா் நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டா் நீதிமன்ற நீதிபதி முன் திரைப்படஇயக்குநா் எஸ்.ஜே.சூா்யா நேரில் ஆஜராகி இரண்டரை மணிநேரம் சாட்சியம் அளித்தாா்.

குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் நான்காவது மாஸ்டா் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.ஜே.சூா்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, உயா் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், எஸ்.ஜே. சூா்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயா்நீதிமன்ற அனுமதி பெற்றுவர மாஸ்டா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.