சென்னை: ‘வாலி’ படத்தின் ஹிந்தி உரிமை தொடா்பான வழக்கில் எஸ்.ஜே.சூா்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் என மாஸ்டா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூா்யா இயக்கத்தில், நடிகா் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-இல் வெளியான ‘வாலி’ என்ற படத்தின் ஹிந்தி உரிமையை போனி கபூா் பெற்றிருந்தாா்.
இதை எதிா்த்து எஸ்.ஜே.சூா்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்.ஜே. சூா்யா தாக்கல் செய்யவில்லை. மேலும், படத்தின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி, ‘வாலி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை தொடங்க இடைக்கால அனுமதி வழங்கியது.
இந்த பிரதான வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஜே.சூா்யாவின் சாட்சியத்தை பதிவு செய்ய மாஸ்டா் நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நான்காவது மாஸ்டா் நீதிமன்ற நீதிபதி முன் திரைப்படஇயக்குநா் எஸ்.ஜே.சூா்யா நேரில் ஆஜராகி இரண்டரை மணிநேரம் சாட்சியம் அளித்தாா்.
குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் நான்காவது மாஸ்டா் நீதிமன்றத்தின் நீதிபதி கின்ஸ்லி கிறிஸ்டோபா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்.ஜே.சூா்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, உயா் நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிந்து விட்டதால், எஸ்.ஜே. சூா்யாவிடம் குறுக்கு விசாரணை செய்ய சென்னை உயா்நீதிமன்ற அனுமதி பெற்றுவர மாஸ்டா் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



