கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புதிய தொடர்கள்... சந்தியாராகம், நளதயமந்தி, சிங்கப்பெண்ணே பெற்ற டிஆர்பி!

நளதயமந்தி, சந்தியா ராகம் ஆகிய தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

Published On :

சின்னத்திரையில் புதிதாக ஒளிபரப்பான தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவை பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சின்னத்திரையில் சிங்கப்பெண்ணே, சந்தியாராகம், நளதயமந்தி போன்ற தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் சிங்கப்பெண்ணே தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கிராமத்துப் பின்னணியில் வளர்ந்த பெண்ணைச் சுற்றி நடக்கும் இந்தக் கதையில், மணீஷா மகேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் முதல் வாரத்திலேயே 10.28 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

நளதயமந்தி, சந்தியா ராகம் ஆகிய தொடர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

நளதயமந்தி தொடர் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி தொடரில் பிரியங்கா நல்காரி, நந்தா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் 3.09 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சந்தியா ராகம் தொடர் அக்டோபர் 9 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் ஸ்வர்ணா, விஜே தாரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா - தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்தில் 3.36 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.