பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை: விஜய் ஆண்டனி அறிக்கை! 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த  சம்பந்தமில்லையென நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். 

Published On :

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த வாரங்களாக பேசு பொருளாகியுள்ளது. மேலும் சிலர் பாலியல் தொல்லைகளும் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டினார்கள். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பியளிக்கும் நடைமுறை நடந்து வருவதாக இசை நிகழ்ச்சி வெளியீட்டார்கள் கூறியுள்ளார்கள். 

இந்நிலையில் ஒரு யூடியூப்பில் இந்த இசை நிகழ்ச்சி பிரச்னைகளுக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனை மறுத்து விஜய் ஆண்டனி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் இவையனைத்தும் முற்றிலும் பொய்யே எனக் கூறியுள்ளார். மேலும் வதந்தி பரப்பிய அந்த யூடியூப் சேனலின்மீது மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.