நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
இவர் வில்லி பாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். இறுதியாக , இவர் நடித்த மைக்கல், யசோதா, ஹனுமான் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார்
முன்னதாக, இவருக்கு ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் உடன் மும்பையில் மார்ச்.1ஆம் தேதி திருமண நிச்சயம் நிகழ்ந்தது.
இந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குநர் அனில் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.
இப்படத்துக்கு சபரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் ஆகியோர் பிரதான வேடத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.