தமிழ் சினிமாவில் இயக்குநர் பா. ரஞ்சித் வருகைக்குப் பிறகு தலித் சமூகத்தினரை முதன்மைப்படுத்தி பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விகர்ம, பார்வதி, மாளவிகா நடிப்பில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கிறது.
பா. ரஞ்சித் தயாரிப்பாளராகவும் நீலம் புரடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’, ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் பி.கே. ரோஸி எனும் பெயரில் திரைப்பட விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது:
தமிழ் சினிமா போன்ற மிகப் பெரிய ஊடகத்தில் தலித் சமூகத்தினரை பற்றி தவறுதலாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. அவர்களைப் பற்றி உண்மையை சினிமாவில் காட்ட விரும்பினேன். தற்போதுதான் தலித் சினிமாக்கள் தமிழில் வந்துகொண்டுள்ளன. அவர்களை கண்ணியமாக காட்டவேண்டும். அவர்களது உலகத்தின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும்.
அவர்கள் பாதிகப்பட்டுகிறார்கள் என்ற ஒரே மாதிரியான சினிமாக்களை எடுக்க வேண்டும். தற்போது இதே மாதிரியான படங்கள் எடுத்தால் ஒரு தேக்கநிலை உருவாகிவிடும். இதிலிருந்து வருங்கால இயக்குநர்கள் விடுபட வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரையரங்குகளில் சாமியாடினால்...! ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்!
வேட்டுவம் வெளியீடு எப்போது?

ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan




