ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

நடிகர் மோகன்லாலின் நடனத்தைக் கண்டு ஷாருக்கான் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

Published On :

மலையாள சினிமாவின் பிரபல திரைப்பட விருதான வனிதா சினிமா விருது விழா நிகழ்ச்சி நேற்று (ஏப்.22) நடைபெற்றது. இதில், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், தனுஷ், ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவின் பகுதியாகக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில், ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளின் நடனங்கள் இடம்பெற்றன.

எதிர்பாராத விதமாக, நடிகர் மோகன்லாலும் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் இடம்பெற்ற, ‘ஜிந்தா பந்தா’ பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த விடியோவைக் கண்ட நடிகர் ஷாருக்கான் அதைப் பகிர்ந்து, “இப்பாடலை மிகச் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் செய்த பங்களிப்பில் பாதியையாவது நான் செய்திருப்பேன் என நம்புகிறேன். பிரியங்கள் சார். உங்களுடன் இரவுணவை உண்ணக் காத்திருக்கிறேன். நீங்கள்தான் உண்மையான ஜிந்தா பந்தா!” என நெகிழ்ச்சியாகத் தன் கருத்தைப் பகிர்ந்தார்.

அதற்கு நடிகர் மோகன்லால், “ உங்களைத் தவிர வேறு யாராலும் இதைச் சரியாகச் செய்ய முடியாது. உங்கள் ஸ்டைலில் நீங்கள்தான் உண்மையான கேங்க்ஸ்டர் (OG - ORIGINAL GANGSTER) ஜிந்தா பந்தா . உங்களின் கனிவான வார்த்தைக்கு நன்றி. பிறகு, வெறும் இரவுணவுதானா? காலை உணவுக்குப் பின்பும் நாம் ஜிந்தா பந்தாவைத் தொடர்வோம்” என உற்சாகமாகப் பதிலளித்துள்ளார்.

வனிதா விருது விழாவில் சிறந்த நடிகராக ஃபகத் ஃபாசிலும் நடிகர் தனுஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரபலமான நடிகர் விருது நடிகர் துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.