காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணத்தின்போது அணிந்த ஆடையை தற்போது வேறு மாதிரி மாற்றி அணிந்துள்ளார்.

Published On :

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

Story image

சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது நடிப்பில் கவனம் செலுத்துகிறார்.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நாகசைதன்யாவுடன் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். தற்போது, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த அன்று அணிந்திருந்த உடையை புதியதாக மாற்றியமைத்து அணிந்துள்ளார் சமந்தா.

Story image

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நடிகை சமந்தா, “இன்று நான் அணிந்திருக்கும் ஆடை என்னுடைய பழைய உடையின் மாற்றியமைத்தது. எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதுபோல இந்த பழைய ஆடைகளை மாற்றி உடுத்திகொள்கிறேன். கவனித்து எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் வாழ்க்கையில் முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.