மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

சீதா ராமம் இயக்குநர் படத்தில் பிரபாஸ்!

சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனு ராகவபுடி பிரபாஸ் படத்தின் பூஜை புகைப்படம்.

Published On :17 ஆகஸ்ட் 2024, 3:37 pm IST

துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகிய சீதா ராமம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றிப்பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார்.

இதன் பூஜை தொடங்கி படப்பிடிப்பு துவங்கியுள்ளதை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறியிருந்த நிலையில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இது குறித்து இயக்குநர் ஹனு ராகவபுடி, “இன்னொரு அற்புதமான படம். மிகவும் முக்கியமான மனிதர்களுடன் மறக்க முடியாத பயணம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.