கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை... சனம் ஷெட்டி ஆவேசம்!

நடிகை சனம் ஷெட்டி சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 1:47 pm IST

நடிகை சனம் ஷெட்டி சினிமாவில் நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களிலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர். பிக்பாஸில் போட்டியாளராக ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தற்போது, விளம்பர மாடலாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.

இந்த நிலையில், சனம் ஷெட்டி கல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்க சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக, அனுமதி பெற சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார்.

சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டி.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த சனம், ”கேரள சினிமாத்துறையில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை கூறியுள்ளது. இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி. தமிழ் திரைத்துறையிலும் இது நடக்கிறது. எனக்கும் நடத்திருக்கிறது. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களை, ’செருப்பால் அடிப்பேன் நாயே’ என திட்டியிருக்கிறேன்.

பாலியல் ரீதியாக அணுகுபவர்களிடம் விலகியே இருங்கள். உங்கள் திறமைக்குக் கிடைக்காத எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். தமிழ் சினிமாவில் எல்லாரும் அப்படியான ஆள்கள் இல்லையென்றாலும் இங்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆண்கள் நமக்காக போராடுவார்கள் என்றில்லாமல் நம் உரிமைக்காக நாம் போராட்டித்தான் ஆக வேண்டும்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.