12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத சம்பளம்! அதிர்ச்சியளித்த அல்லு அர்ஜுன்!

புஷ்பா - 2 படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம்...

Published On :

புஷ்பா - 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.

கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் உலகம் முழுவதும் பல ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

முக்கியமாக, இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 300 கோடியை ஈட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையிடுவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு வாயிலாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அல்லு அர்ஜுன் ஏன் பூலோக நட்சத்திர நடிகர்? இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வரவேற்பு புஷ்பா - 2 படத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆபிஸை தகர்க்கும். அல்லு அர்ஜுன் புஷ்பா -2 படத்திற்கு மட்டும் ரூ. 287.36 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். உலகில் வேறு எந்த நடிகருக்கும் இந்த உயரங்கள் அமைந்தது கிடையாது. அல்லு அர்ஜுன்தான் உண்மையான உச்ச நட்சத்திரம்” எனத் தெரிவித்துள்ளார்.

புஷ்பா - 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் பெற்ற சம்பளம் இந்திய திரைத்துறையினரிடம் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.