டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக திரையிடப்பட்ட தமிழ்ப் படம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் புதுமையான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் - படம் | எக்ஸ்

Updated On :8 டிசம்பர் 2024, 3:55 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் புதுமையான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக போட்டியாளர்களுக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு 100 நாள்களுக்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு, புதிதாக வெளியான படம் திரையிடப்பட்டதால், போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சச்சரவு வாரம்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் முழுக்க ஏஞ்சல்களும் டெவில்களும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் போட்டியாளர்களிடையே கடும் சச்சரவு நிலவியது.

டெவில்களாக இருப்பவர்கள் ஏஞ்சல்களாக இருப்பவர்களை கடுமையாக தொந்தரவு செய்தனர். இதில், ஏஞ்சல்களாக இருப்பவர்கள் தாக்குபிடித்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். இப்போட்டியில் ஏஞ்சல்கள் பொறுமையிழந்தால் டெவில்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு ஒரு இதயமும் வழங்கப்படும். இவ்வாறு அதிக இதயங்களைப் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

முதல் நாளில் ஏஞ்சல்களாக இருந்தவர்கள் மறுநாள் டெவில்களாகவும், டெவில்களாக இருந்தவர்கள் ஏஞ்சல்களாகவும் மாற வேண்டும். இதனால் சுவாரசியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முதல் நாளை விட இரண்டாவதுநாள் சுவாரசியம் குறைந்ததாகவே இருந்தது.

பிக் பாஸ் வீட்டில் படம்

இந்நிலையில், போட்டியாளர்களை மகிழ்விக்கும் வகையில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சம்பவம் நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவருக்கும் சமீபத்தில் வெளியான திரைப்படம் திரையிடப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அமரன் திரைப்படம் பிக் பாஸ் வீட்டில் திரையிடப்பட்டது. இரவுக் காட்சியாக, நொறுக்குத் தீனிகளுடன் திரையிடப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அமரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் புரமோஷன் செய்யப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போதுதான், அமரன் திரைப்படம் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.

பிக் பாஸ் இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கமல் அறிவித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய படம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களுக்கு திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.