வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பிரபாஸுக்கு வில்லனாக பிரபல கொரிய நடிகர்?

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

News image
Updated On :7 ஜூலை 2024, 1:43 pm IST

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

கல்கி, சலார் படங்களின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் போலீஸ் கதையாக உருவாகிறது. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சந்தீப் - பிரபாஸ் இணைகிற படத்தின் வில்லனாக பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் (ma dong seok) நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 மா டாங் சியோக் (ma dong seok)

மா டாங் சியோக் (ma dong seok)

கொரியன் ஆக்சன் படங்களில் நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் மா டாங். இவர் நடிப்பில் வெளியான , ‘தி கேங்ஸ்டர் தி காப் தி டெவில் (the gangster the cop the devil)’ திரைப்படம் உலகளவில் கவனம் பெற்றது.

தற்போது, பான் ஆசியன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இப்படம் இந்திய மொழிகளுடன் ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளிலும் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.