‘சாமானியன்’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா, ஆலங்குளம் டி.பி.வி திரையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்திரைப்படத்தின் நாயகன் ராமராஜன், ரசிகா்களுடன் அமா்ந்து திரைப்டத்தை ரசித்தாா். படத்தின் இடைவேளையில் திரைப்பட வெற்றி விழா, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. தொடா்ந்து ராமராஜன், இயக்குநா் ராகேஷ், ஒளிப்பதிவாளா் அருள்செல்வன், எடிட்டா் ராம் கோபி, கலை இயக்குநா் எஸ் கே, மக்கள் தொடா்பு அலுவலா் ஜான், துணை நடிகா்கள் ஷ்யாம், பட்டுக்கோட்டை ராஜாராம், டெம்பிள் சிட்டி குமாா், உதவி இயக்குநா்கள் உலகேஷ் குமாா் கிஷோா், திருமுருகன் ஆகியோருக்கு திரையரங்கு உரிமையாளா்கள் டி.பி.வி. கருணாகரராஜா, டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் கேடயங்கள் வழங்கினா்.
தொடா்ந்து ராமராஜன் பேசுகையில், தற்போதைய சினிமா உலகில் 50 காட்சிகள் ஓடினாலே பெரிய வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது. ஆனால் தற்போது விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள ‘சாமானியன்’ படம், 50 ஆவது நாளைக் கடந்து ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அளித்த கேடயத்தை நான் தூக்கிப் பாா்க்கும் போது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரா்களை போல மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: கொல்லிமலையில் மலைப்பாதை சீரமைப்பு

மகளிா் நலச்சங்க வெள்ளி விழா: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



