ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

வசூலில் திணறும் சர்ஃபிரா!

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா வசூலில் திணறி வருகிறது.

News image
Updated On :15 ஜூலை 2024, 4:08 pm IST

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா வசூலில் திணறி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்காக சூர்யாவுக்கும் சுதா கொங்காராவுக்கும் தேசிய விருதுகளும் கிடைத்தன.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கினார். சர்ஃபிரா எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்தார்.

சர்ஃபிரா, இந்தியன் - 2 திரைப்படத்துடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியானது. சூரரைப் போற்று அளவிற்கு இல்லையென்றாலும் ஹிந்தியில் நல்ல விமர்சங்களையே பெற்று வருகிறது.

படத்தின் கதைக்காவே இப்படமும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் ரூ.12 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ரூ.80 கோடியில் உருவான சர்ஃபிரா வசூலில் திணறி வருகிறது. ஹிந்தியில் கல்கி திரைப்படமே ஆதிக்கம் செலுத்தி வருவதால், சர்ஃபிரா வசூல் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.

மேலும், கடந்த 3 ஆண்டுகளாக அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த எந்தப் படங்கள் வசூலைக் குவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.