திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

மீம்ஸ் உருவாக்குபவர்கள் கலைஞர்கள்..! ஹிந்தி நடிகர் புகழாரம்!

பிரபல ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி மீம்ஸ் கிரேயட்டர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

News image

ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிப்பாதி

Updated On :18 ஜூலை 2024, 7:10 pm IST

ஹிந்தி திரைப்படங்களில் 2003இல் இருந்து நடித்து வருகிறார் நடிகர் பங்கஜ் திரிப்பாதி. அனுராக் காஷ்யப் படங்களில் இவரது கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது.

2 தேசிய விருதுகள் உள்பட பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். இதுவரை சுமார் 67 படங்களில் நடித்துள்ளார். பல இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஸ்டீரி2 படம் வெளியாகவுள்ளது. நிரேன் பட இதனை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ளார்கள். 2018இல் வெளியான ஸ்ட்ரீ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் ஆக.15ஆம் நாள் வெளியாக உள்ளது. மிர்ஜாபூர், கேங்ச் ஆஃப் வசிப்பூர் ஆகிய படங்களில் பங்கஜ் திரிப்பாதியின் மீம்ஸ்கள் மிகவும் பிரபலம்.

பங்கஜ் திரிப்பாதி பிரபல மீம் டெம்ப்ளேட்

பங்கஜ் திரிப்பாதி பிரபல மீம் டெம்ப்ளேட் - படம்: கேக்ஸ் ஆஃப் வசிப்பூர் / ஸ்கூப்வூப்.காம்

இது குறித்து பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கஜ் திரிப்பாதி பேசியதாவது:

தொடக்கத்தில் நான் மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலையில்லாமல் இணையத்தில் பொழுதைக் கழிப்பவர்களாக நினைத்தேன். ஆனால், மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் படைப்புத்திறன் உள்ள ஆள்கள் என தற்போது உணர்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.