சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

4ஆவது படத்தை இயக்க தயாராகும் தனுஷ்!

நடிகர் தனுஷ் புதிய படத்தினை இயக்கி நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

News image

இயக்குநர் தனுஷ்.

Updated On :20 ஜூலை 2024, 1:41 pm IST

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் 2002இல் அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

பாலிவுட்,ஹாலிவுட் என நடிப்பில் தனுஷ் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநராகவும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார்.

தனது 50ஆவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார் தனுஷ். ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ராயன் படத்துக்குப் பிறகு தனுஷ் தெலுங்கில் குபேரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இளையராஜா பயோப்பிக்கில் நடிக்கிறார்.

இதற்கடுத்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கிவருகிறார். இது பிரேமலு மாதிரியான படமென எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கிய தனுஷ் ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போஸ்டர்

நடிகர் தனுஷ் பல கதைகளை எழுதி வைத்துள்ளார். அடுத்து புதிய படம் ஒன்றில் கதை எழுதியுள்ள தனுஷ், அதை தானே இயக்கி நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இதுவரை 3 படங்களை இயக்கியுள்ள தனுஷ் 4ஆவது படத்து தயாராக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.