நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

விசில்.. நடனம்.. திரையரங்கில் கலக்கும் வாட்டர் பாக்கெட் பாடல்!

ராயன் திரைப்படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் திரையரங்கில் பெரிதாக ரசிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :27 ஜூலை 2024, 9:08 pm IST

ராயன் திரைப்படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் திரையரங்கில் பெரிதாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

அதேநேரம், படத்தைப் பார்க்கும் ஆர்வதிலும் பல ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

வாட்டர் பாக்கெட் பாடலில்...

வாட்டர் பாக்கெட் பாடலில்...

முன்னதாக, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, வாட்டர் பாக்கெட் என்கிற கானா பாடல், வரிகளுக்காகவும் இசைக்காகவும் ஈர்ப்பைக் கொடுத்தது.

இந்த நிலையில், இப்பாடலைத் திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் விசிலடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சந்தீப் கிஷனுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையான காதல் காட்சிக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதனை, கானா காதர் என்பவர் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.