திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நடிகையுடன் உறவு? நடிகர் மீது மனைவி புகார்!

நடிகையுடன் யுவராஜ்குமார் ஒன்றாக இருந்ததை பார்த்ததால் அடித்து வெளியே தள்ளியதாக குற்றச்சாட்டு.

News image
Updated On :12 ஜூன் 2024, 9:23 am IST

பிரபல கன்னட நடிகர் யுவராஜ்குமாருக்கு நடிகையுடன் தகாத உறவு இருப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமாரின் பேரனான யுவராஜ்குமார், யுவா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக குழந்தை கதாபாத்திரத்தில் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

இவரும் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி பைரப்பா என்பவரும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு ராஜ்குமார் குடும்பத்தினரால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் பயிற்சி மையமான ராஜ்குமார் அகடமியை ஸ்ரீதேவி கவனித்து வந்தார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி நடிகர் யுவராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ராஜ்குமார் அகடமியின் கணக்கில் இருந்து அவரது தனிப்பட்ட கணக்குக்கு ரூ. 3 கோடியை முறைகேடாக மாற்றியுள்ளதாகவும், அகடமியின் நிதியை முறைகேடாக பயன்படுத்தி 20-க்கும் மேற்பட்ட சொத்துகள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்பத்தினரை அவமரியாதையாக நடத்துவதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராம் பதிவு

ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராம் பதிவு

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி தரப்பில் இருந்து யுவராஜ்குமாருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், யுவராஜ்குமாருக்கும் சக நடிகை ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாகவும், விடுதி அறையில் இருவரும் ஒன்றாக இருந்ததை தான் பார்த்ததால் அடித்து வெளியே தள்ளினார் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை ஜூலை 4-ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீதேவின் குற்றச்சாட்டு கன்னட திரையுலகில் புயலைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.