மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீரியலிலிருந்து விலகும் சின்னத்திரை நாயகி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடரிலிருந்து நடிகை தர்ஷனா அசோகன் விலகுவதாகத் தகவல்

News image

தர்ஷனா அசோகன்

Updated On :5 மார்ச் 2024, 10:54 am

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடரிலிருந்து நடிகை தர்ஷனா அசோகன் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கனா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு கொண்ட கிராமத்துப் பெண்ணுக்கு ஏற்படும் தடைகளும், அதனை அவர் எதிர்கொள்ளும் சூழல்களுமே கனா தொடரின் மையக்கதை.

கனா தொடரில் தர்ஷனா அசோகன் - விஷ்ணு உன்னிகிருஷ்ணன்

கனா தொடரில் தர்ஷனா அசோகன் - விஷ்ணு உன்னிகிருஷ்ணன்

இந்தத் தொடரில் நடிகை தர்ஷனா அசோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடித்து வருகிறார்.

கனா தொடரில் நடித்ததற்காக ஜீ தமிழ் சின்னத்திரை விருதையும் நடிகை தர்ஷனா வென்றுள்ளார். அதோடு மட்டுமின்றி நண்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக மக்களைக் கவர்ந்த தொடர் என்ற பிரிவிலும் கனா தொடர் விருது வென்றுள்ளது.

விருதுடன் நடிகை தர்ஷனா - கனா குழுவினர்

விருதுடன் நடிகை தர்ஷனா - கனா குழுவினர்

இந்நிலையில், கனா தொடரிலிருந்து நடிகை தர்ஷனா விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தர்ஷனாவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தர்ஷனா அசோகன்

நடிகை தர்ஷனா அசோகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.