எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மஞ்ஞுமல் பாய்ஸ் - இதை கவனித்தீர்களா?

குணா குகையை மையப்படுத்தி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

Published On :9 மார்ச் 2024, 4:27 pm IST

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாயஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, உலகளவில் ரூ.120 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை அடைந்திருக்கிறது மஞ்ஞுமல் பாய்ஸ்.

Story image

DOTCOM

நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் தாக்கத்தை வைத்தே மஞ்ஞுமல் பாய்ஸ் உருவாகியிருக்கிறது.

சுவாரஸ்யமாக, கமல்ஹாசன் குணா படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 33. மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்திற்கு தற்போது 33 வயது. சரியாக, குணா திரைப்படம் வெளியாகியும் 33 ஆண்டுகள் ஆகிவிட்டது!

கமல்ஹாசனின் பிறந்தநாளைக் கணக்கிட்டால் 36 வயதில்தான் குணா படத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால், குணா படத்தில் நடிக்கும்போது தனக்கு 33 வயது என நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் கூறியதாக இயக்குநர் சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.