25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக் கான்!

பிறந்தநாளையொட்டி ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Shah Rukh Khan

ஷாருக் கான் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2024, 8:27 pm IST

புகைப் பழக்கத்தை விட்டுவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அறிவித்துள்ளார்.

59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகரான இருக்கும் ஷாருக் கான் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான் குடும்ப உறுப்பினர்கள் உள்பட ரசிகர்கள் பலர் ஷாருக் கானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்பொழுது நடைப்பெற்ற மீட் அன்ட் கிரீட் என்ற பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ஷாருக்கான் பேசியதாவது,

"நான் இப்பொழுது புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டேன். புகைபிடிப்பதை நிறுத்திய பின் சுவாசம் சீராக இருப்பதை உணரமுடிகிறது" எனக் குறிப்பிட்டார். இது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நேர்காணலில் ஷாருக்கான், தான் ஒரு நாளுக்கு 100 சிகரெட்டுகளை பிடித்துக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். உணவு , தண்ணீர் என எதுவும் உட்கொள்ளாமல், 30 கோப்பை காபி மட்டும் குடித்துக்கொண்ட காலமும் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.