12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மறுவெளியீடான குணா திரைப்படம்..!

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் 1991இல் வெளியான குணா படம் மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடானது.

குணா படத்தின் போஸ்டர்.

Published On :

நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ரேகா, ரோஷினி, ஜனகராஜ் நடித்துள்ளார்கள்.

குணா படத்தின் பாதிப்பில் பல படங்கள் வெளியானாலும் இன்றளவும் குணா படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான மஞ்ஞுமெல் பாய்ஸ் படம் குணா படத்தின் பாடல்களை மீண்டும் தமிழர்களுக்கு நினைவூட்டியது.

இந்தப் படம் மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி மறுவெளியீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இதைத் தொடர்ந்து,’குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. எனவே, கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையைக் கோர முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி, படத்தின் மீதான தடையை விலக்கினார்.

இந்த நிலையில், இப்படம் இன்று (நவ. 29) தமிழக அளவில் மறுவெளியீடாகியுள்ளது.

குணா படத்தின் போஸ்டர்.

குணா படத்தின் போஸ்டர்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் குணா திரைபடம் மறுவெளியீடாகியுள்ளது. மறுவெளியீட்டில் விஜய்யின் கில்லி திரைப்படம் மட்டுமே அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.