தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்..!

அனுமன் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரசாந்த் வர்மாவின் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர்.

Updated On :10 அக்டோபர் 2024, 6:43 pm IST

அனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா கதையில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்திய படமாக வெளியான அனுமான் திரைப்படம் மூலம் இயக்குநர் பிரசாந்த் வர்மா கவனம் பெற்றார். இந்தப் படத்தில் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (பிவிசியு) ஒன்றை உருவாக்கினார்.

இந்த யுனிவர்ஸில் 3ஆவது படத்தை பிரசாந்த் வர்மா அறிவித்தார். இதன் பெயர் மகா காளி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாக உருவாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பாகம் ரிவாஸ் ரமேஷ் டுக்கல் தயாரிக்க பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார். இதற்கு முன்பாக மார்டின் லூதர் கிங் படத்தை இயக்கியுள்ளார்.

வழக்கமானதை உடைக்கும் மனப்பான்மையுடன் இந்தப் படத்தில் கறுப்பு நிற பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சமரன் சாய் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொன்மத்துடன் உருவாகும் இந்த மேஜிக்கல் ரியலிசம் படம் மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஐமேக்ஸ் 3டி, பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் அனுமன் ஜப்பானில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.