பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தேசிய விருதுக்குப் பிறகும் கிண்டல்களால் பாதிக்கப்படும் ஆலியா பட்..!

பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுவதாகக் கூறியுள்ளார்.

நடிகை ஆலியா பட்

Published On :24 அக்டோபர் 2024, 5:46 pm IST

2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1 தேசிய விருது 6 ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெற்றுள்ள ஆலியா பட் தான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுவதாகக் கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் ஆலியா பட் கூறியதாவது:

நானும் ரன்பீரும் வித்தியாசமாக சூழலை அணுகுவோம். ஆனால், அப்படியிருந்தும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம். அன்புடனும் மரியாதையுடனும் வேலையில் கவனம் செலுத்தி எங்களது வாழ்க்கையில் அதுவும் முக்கியமான ஒன்றாக பார்க்கிறோம். ஆனால், அது மட்டுமே உலகம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நான் இப்போது அம்மாவாக இருக்கிறேன். எனக்கு குடும்பமே முதன்மையான முக்கியத்துவம். உடல், மனம், உணர்ச்சிகள் ரீதியாக நான் முதலில் அம்மாவாகவே இருக்கிறேன்.

நான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுகிறேன். வெறுப்பைத் தூண்டும் கமெண்டுகள் சமூகவலைதளங்களில் வருகின்றன. என்னுடைய படங்கள்தான் அதற்கு பதிலடியாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதுதான் என்னையும் எதிர்மறையான கருத்துகளையும் பாதுகாக்கும் சுவராக கருதுகிறேன். வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது.

கரீனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ரேயா கோஷல் அவர்களது வாழ்க்கையில் அவர்களது தனித்துவத்தினால் மிளிர்கிறார்கள். நான் அதைத்தான் என்னுடைய கதாபாத்திரங்களில் கொண்டு வர விரும்புகிறேன் என்றார்.

சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

இதற்கடுத்து ஷர்வாரியுடன் இணைந்து ஆல்ஃபா எனும் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து கணவர் ரன்பீருடன் இணைந்து லவ் அண்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.