வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.
இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
21,000 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் 1 கோடி ரூபாயை வழங்கியுள்ள நிலையில் தற்போது மகேஷ் பாபுவும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் மகேஷ் பாபு கூறியதாவது:
வெள்ளம் இரண்டு தெலுங்கு மாநிலங்களையும் பாதித்துள்ளது. ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சத்தை ஒப்படைக்கிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் மீட்பு செயல்முறையை எளிதாக்கவும் அந்தந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கூட்டாக ஆதரவளிப்போம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைகளை தாண்டி வலுவாக திரும்புவோம் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆதிக்கம் செலுத்தும் ஆயா சேர்!

புயல், கனமழை, நிலநடுக்கம்... ஆப்கன், பாகிஸ்தானில் 133 பேர் பலி!

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


