உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விக்ராந்த்தின் புதிய திரைப்படம்!

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ராந்த்தின் புதிய பட பூஜை புகைப்படம். - படம்: எக்ஸ்/ பிக் பேங் சினிமாஸ்

Published On :

நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் உறவுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு படங்களின் மூலம் கவனம் பெற்றார்.

ஓடிடியில் வெளியாகாத லால் சலாம்

கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்.

இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதுவரை எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய படம்

தற்போது, வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிக் பேங் சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.7) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.