புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

திரையரங்கில் அடித்துக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, பவன் கல்யாண் தொண்டர்கள்!

’யாத்ரா 2’ திரையிடலின்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் கட்சித் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2024, 2:33 pm IST

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி. ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் இன்று ஆந்திரம், தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தைத் திரையிட்ட திரையரங்கம் ஒன்றில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சித் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

Story image

சில மாதங்களாகவே ஜெகன் மோகன் ரெட்டியும், பவன் கல்யாணும் கருத்தியல் ரீதியாக தாக்கிப் பேசி வருவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில்தான் இந்தத் தொண்டர்கள் சண்டை நிகழ்ந்திருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.