நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகர் நானிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கவின்: காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகர் நானிக்கு கவின் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:37 pm IST

பிக்பாஸ், சின்னத்திர மூலம் கவனம் பெற்றவர் நடிகர் கவின். ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கிய ’டாடா’ படத்தில் நடிகர் கவின் நடித்திருந்தார். இதில் அபர்ணாதாஸ் நாயகியாக நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் தெலுங்கில் ‘பா..பா’ என்கிற பெயரில் வெளியானது. 

தெலுங்கில் நானி நடிப்பில் பான் இந்திய படமாக ஹாய் நான்னா படமும் வெளியானது. 

கவினின் டாடா திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பிரபல தெலுங்கு நடிகர் நானி புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு நடிகர் கவின் தனது எக்க்ஸ் பக்கத்தில், “நான் மிகவும் மதிக்கும் நபர் எனது படத்தினைப் பாராட்டி பேசுவது  நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி நானி சார்” எனக் கூறியுள்ளார். 

Story image

இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.